×

கொரோனா தனிமையால் மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்வேதா பாசு

ஐதராபாத்: தமிழில், சந்தமாமா உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா பாசு. ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பெண்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, மனநல சிகிச்சைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்த அவர் உதவி இயக்குனர் ரோகித் மிட்டலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது  அவரை விவாகரத்து செய்து விட்டார். தற்போது கொaரோனா ஊரடங்கில் தனிமையில் இருக்கும் அவர் மனஅழுத்த பிரச்னைக்கு ஆளாகி உள்ளார். இதற்காக அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையில் எப்போதும் தனியாக வசித்ததில்லை. முதலில் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வசித்தேன். பிறகு கணவருடன் வசித்தேன். விவாகரத்துக்குப் பிறகு, தனியாக வசித்து வருகிறேன். இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் பிரச்னை வந்துவிட்டது. இதனால் என் மனநிலை பாதிக்கப்பட்டது.

இதற்காக வீடியோ கான்பரன்சில் மருத்துவரிடம் பேசி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இந்த காலகட்டத்தில் பலர் இந்த மனநல சிகிச்சையை நாடுவதாக டாக்டர் சொன்னார். மன ஆரோக்கியம் முக்கியமானது. இந்த காலகட்டத்தில் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் என் அம்மா என்னை பார்க்க வந்தார். சில அடி தூரத்தில் நின்று கொண்டே பேசினோம். அவரை கட்டி அணைக்க கூட முடியவில்லை. இது கடினமான காலம், விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன் என்றார்.

Tags : Corona Lonely ,Shweta Basu , Shweta Basu, mentally ill , Corona Lonely
× RELATED சேலத்தில் கொரோனா தனிமை வார்டில்...